Monday, August 13, 2012

ஊரை ஏமாற்றும் சாமியார்கள் உருவாவது எப்படி?

பிரேமானந்தா, நித்யானந்தா, கல்கி சாமியார், இது மட்டுமல்லாமல் பீடி சாமியார், குட்டி சாமியார், அரிவாள் சாமியார், சாராய சாமியார் இன்னும்  இப்படி எத்தனையோ சாமியார்கள் இந்தியா/தமிழகம் முழுவதும் தங்களது ஆசிரமங்களை அவர்களது வசதிக்கு தகுந்தார்ப்போல் அமைத்து, மக்களுக்கு ஆசி (???) வழங்கிகொண்டு இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள்.



அப்பா, அம்மா,  சகோதரன், சகோதரி, மனைவி, மக்கள் என மொத்த குடும்பமே இருந்தும், இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் சாமியாரை தேடி போக என்ன காரணம் என்று யோசித்து பார்த்தன் விளைவுதான் இந்த இடுகை.

சாமியார்கள் என்பவர்கள், கடந்த பல ஆயிரகணக்கான வருடங்களாகவே இந்திய/தமிழக வரலாற்றில் இருந்துள்ளனர். ராமாயணம், மகாபாரதம் என்று எல்லா இதிகாசங்களிலும் எத்தனையோ முனிவர்கள் இதிகாச நாயகர்களுக்கு குருகுல பயிற்சி முதல் பல கலைகளும் கற்று கொடுத்தது நாம் அறிந்ததே.

புராண காலத்தில் சாமியார்கள் (முனிவர்கள்) என்பவர்கள் அரச குலகுருவாகவும், பல வித்தைகளை கற்றுக்கொடுப்பவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால், இன்றைய சாமியார்கள் என்பவர்கள், ஒன்று சித்து வேலைகள் தெரிந்த மந்திரவாதிகளாகவோ அல்லது மக்களை மயக்கும் அளவு பிரசங்கம் செய்பவர்களாகவோ இருக்கிறார்கள்.

இவர்களை நோக்கி புற்றீசல்கள் போல மக்கள் படையெடுக்க காரணம் என்ன?

இன்றைய குடும்ப சூழலில், சொந்த பந்தங்கள் எவ்வளவோ இருந்தாலும், மனிதனுக்கு பிரச்சனைகள் அதைவிட அதிகமாக இருக்கின்றன. மனைவியுடன் பிரச்சனை, அப்பா அம்மாவுடன் சண்டை, சகோதரர்களுடன் சச்சரவு, வியாபாரத்தில் நஷ்டம் இப்படி காலை முதல் இரவு வரை பல வகையான பிரச்சனைகள். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சனை. சிலருக்கு பிள்ளை இல்லையே என்ற பிரச்சனை. சரி, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றாலும், பலருக்கு தூக்கமே ஒரு பிரச்சனைதான். இப்படி பிரச்னையை தன்னுடைய உடலின் ஒரு அங்கமாகவே சுமந்துகொண்டிருக்கும் பலர், சாமியார்களை தேடி ஓடுவது, நமக்குள்ள பல பிரச்சனைகளையும் கடவுள் உருவில் இருக்கும் சாமியார் என்ற தீர்கதரிசி தீர்த்துவைப்பார் என்ற நம்பிக்கையில்.

திருநீறு கொடுக்கும் கூட்டம், குறி சொல்லும் கூட்டம் என்று இருந்த சாமியார்கள், கடந்த சில வருடங்களாக இளைஞர்களை குறிவைத்து பிரசங்கம், முன்னணி பத்திரிகைகளில் கட்டுரை மற்றும் தியானம் என்று தேர்ந்த ஒரு வியாபாரி போல தங்கள் ஆசிரமங்களை அமைத்து மக்களை அடிமைபடுத்த ஆரம்பித்தனர்.

இவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?

இந்தியர்கள் மட்டுமல்ல, பல வெளிநாட்டு ஏமாளிகளும் இவர்கள் விரித்த வலையில் விழுந்து பணத்தை அள்ளி வீசுகிறார்கள். இவர்கள் செய்வது எல்லாம், தங்களது ஆசிரமத்தை அமெரிக்கா, ஐரோப்பா என்று எல்லா நாடுகளிலும் பரவச்செய்வது. மாதமாதம் பல வெளிநாடுகளுக்கும் சென்று தங்கள் வித்தைகளை பறைசாற்றி பல லட்சங்களை சுருட்டுவது.

நித்யானந்தா சாமியாரின் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்தாலும்கூட, அவருக்கு இளைய ஆதீனம் பதவி கொடுத்து தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.



சமீபத்தில், கல்கி சாமியார் ஆசிரமத்தில் போதைக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருக்கும் செய்தி பல மாதங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியிலும் ஒரு நிகழ்ச்சி வாயிலாக அனைவருக்கும் தெரியவந்தது. இங்கே இருப்பவர்கள் அனைவருமே, அரை பாட்டில் சரக்கு அடித்தமாதிரியே உலவிக்கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் youtube தளத்திற்கு சென்று, Abnormal activities in Kalki Bhagwan ashram என்று டைப் செய்யுங்கள்.

அல்லது, கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்.


பல பகுதிகளாக காணொளி கிடைக்கும். இதுவரை பார்க்காதவர்கள், அதைப்பார்த்து அதிர்ச்சி அடையலாம்.

இது தெளிவாக ஏமாற்றுவேலை என்று தெரிந்தாலும் கூட, இப்போது அவர் இன்னும் அதே ஆசிரமத்தில் தான் ஏமாற்றி கொண்டு இருக்கிறாரா இல்லை காவல்துறை ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்று தெரியவில்லை.

புதிதாக ஒரு சாமியாரைபற்றி இப்போது ஒரு செய்தி. கஞ்சா வித்தவர், மனைவியை கொன்றவர் என்று. இப்படி வாரா வாரம் ஒரு சாமியாரின் லீலைகள் அம்பலமாகி வருகிறது.

இப்படி மக்களை ஏமாற்றும் இந்த குள்ளநரி கூட்டத்தை இன்னும் எத்தனை நாளுக்குத்தான் நாமும் பார்த்து ஏமாந்துகொண்டே இருக்கப்போகிரோமோ?
தொடர்புடைய பதிவுகள் :


4 comments:

  1. நல்ல அலசல்...

    குற்றம் இவர்கள் மீது சொல்ல முடியாது...

    நம்ம மக்களின் அறியாமையை என்னவென்று சொல்ல...? ...ம்...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார். இந்த விஷயத்தில் இந்தியர்கள் மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகமுமே ஏமாளிகளாகத்தான் இருக்கிறது.

      Delete

  2. அருமையான பதிவு தோழா... இங்கு வந்து எனது பதிவையும் பாருங்கள்.
    " நான் ஆம்பிளையே இல்லைங்க"
    http://varikudhirai.blogspot.in/2012/08/blog-post_4.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருன்ப்ரசாத். இன்னிக்கு உங்களோட 25 வது பதிவ படிச்சேன். இதையும் போயி படிக்கிறேன்.

      Delete