Monday, September 24, 2012

பக்கத்து மாநிலத்தின் அதிமேதாவி அங்குராசுகள்

கர்நாடகா மாநிலத்துல இருக்குற வேலை வெட்டி இல்லாத சோம்பேறி, ரவுடி, தெருப்பொறுக்கி போன்ற அதிபுத்திசாலிங்களுக்குன்னு சில கட்சிகள் இருக்கு. அதுக்கும் தலைவர்கள் இருக்காங்க.  இவங்களோட வேலையே, அடுத்த ஊருக்காரங்க யாராவது கர்நாடகா (குறிப்பா பெங்களூரு) வந்து நல்லா சம்பாரிக்கறது தெரிஞ்சா இந்த அதிபுத்திசாலிங்களுக்கு வயிறு எரியும். எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்திட்டு இருப்பாங்க.

நல்ல செழிப்பான ஆத்து பிரதேசத்துல எவ்வளவோ பணப்பயிர் செஞ்சு சம்பாரிக்கவேண்டிய இடத்துல, ராகி பயிறு பண்ணற அளவுக்கு அறிவாளிங்கன்னா பாத்துகோங்க.

முன்னாடி 1991 காவேரி தண்ணி பிரச்சன வந்தப்போ, மைசூர், மாண்டியா, ஹாசன் பக்கம் தமில்காரங்க தோட்டம், வீடு எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கினாங்க. அதுக்கு முக்கியமான காரணம் தமிழ் நாட்டுக்கு தண்ணி கேக்கறாங்கன்னு இல்ல, தமிழ்காரன் ஊரு விட்டு ஊரு வந்து நல்ல பொழைக்கரானேன்னு பொறாமை, பொச்செரிச்சல்தான்.

தமிழ் நாடு பஸ்சு, லாரின்னு ஒன்னையும் விட்டு வக்கல. அதேமாதிரி, இந்த வீரப்பன், ராஜ்குமார கடத்திட்டு போனப்பவும், பிரச்சன பண்ணுனாங்க. மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு காவேரி பிரச்சனை. இதை எல்லாம் தூண்டி விடரதுக்குன்னு சில ஆளுங்க இருக்காங்க. ஒருத்தர் வாட்டாள் நாகராஜு. தலையில தொப்பிய போட்டுட்டு சினிமா வில்லன் மாதிரி இருப்பார். அவர் போட்டோவ சின்ன பசங்ககிட்ட காமிச்சாலே, கொழந்தைங்க பயத்துல மூச்சா போயிடும். அதே மாதிரி நாராயண கௌடான்னு ஒரு அதிசயப்பிறவி இருக்கு.


இங்கே எருமைமேல ஜாலியா வர்றார் பாருங்க, அவருதான் வாட்டாள்

 இந்த மாதிரி ஏதாவது தமிழ் நாட்டுக்கு எதிரான பிரச்சன வந்துட்டாலே, இந்த தெருப்பொறுக்கிங்களுக்கு கொண்டாட்டம்தான். கையுல ஒரு கொடியப்புடிசுட்டு, சரக்கப்போட்டுட்டு கெளம்பிருவாங்க.

இவங்க முக்கியமான நோக்கம், எங்கே வேலை நல்லா நடக்குதோ, அத கெடுக்கணும். முக்கியமா, இந்த I.T அலுவலகம் இருக்கற பகுதிகள்ல கூட்டம் கூட்டமா போயி கல்ல விட்டு ஏறியுவாங்க. அவங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு குடுக்கும்.

இந்த I.T அலுவலகங்கல குறி வைக்கறதுக்கு காரணம், அங்கே நிறையப்பேரு வெளி மாநிலத்து ஆளுங்க (முக்கியமா தமிழ் காரங்க) வேலை செய்யறதுதான். இப்படி ஏதாவது பிரச்சன வந்தாலே, எல்லா வாகனங்களிலுமே, ராஜ்குமார் போட்டோவ ஓட்டிட்டு ஓட்டுவாங்க. அப்படி வண்டியில ராஜ்குமார் போட்டோ இருந்தா, கர்நாடகா ஆளுங்கன்னு அவங்கள ஒன்னும் செய்ய மாட்டாங்க. அந்த அளவுக்கு மேதாவிங்க, அறிவாளிங்க.

இதெல்லாம் விட, இன்னொரு கொடுமை என்னன்னா, இன்போசிஸ் நாராயமூர்த்தி ஐயாகிட்ட, கர்நாடகா மாணவர்களைத்தான் அவங்க அலுவலகத்துல வேலையக்கு எடுக்கனும்னு அவர மிரட்டுனவங்க.

இப்போ மறுபடியம், காவேரி தண்ணி பிரச்சன தல தூக்குது. இந்த அதிபுத்திசாலிங்க வேலைய ஆரம்பிச்சுடுவாங்க.

இந்த மின்சாரம் எப்படி சென்ட்ரல் கிரிட் அப்படின்னு ஒரு மத்திய தொகுப்புல இருந்து எல்லா மாநிலத்துக்கும் கிடைக்குதோ அந்த மாதிரி, இந்த நதி நீர் விஷயமும் மத்திய தொகுப்பு கட்டுப்பாட்டுல இருந்திருந்தா, இந்த பிரச்சினையே வந்திருக்காது.

அதுசரி... நம்ம ஊருக்குத்தான், மின்சாரமும் சரி, தண்ணீரும் சரி, ரெண்டுமே வருவது இல்லியே. அப்புறம் எது எங்கே இருந்தா என்ன?

Wednesday, September 12, 2012

அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துமா ஐபோன்-5?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த விஷயமான ஐபோன்-5 இன்று வெளியிடப்படுகிறது. இது, இந்த வருடத்தின் அமெரிக்காவின் நான்காம் காலாண்டு பொருளாதரத்தை 0.5% சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிபுணர்களின் கணிப்புப்படி, ஒரு ஐபோனில், 400 அமெரிக்க டாலர் அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி (அதாவது, அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட பாகங்கள்) இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் மட்டும், அமெரிக்காவில் ஒரு கோடி ஐபோன் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ, அமெரிக்கர்களின் சுருக்கு பையில் இருக்கும் 600 டாலருக்கு வேட்டு நிச்சயம்.

அப்பாடா.... இந்த ஐபோன் செய்திய வச்சு, ஒரு குட்டி பதிவ தேத்தியாச்சு.

Wednesday, September 5, 2012

ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது, சரோஜ் நாராயண சுவாமி - மறக்க முடியுமா?

கடந்த 20 வருஷத்துல, என்னெல்லாம் மாறி இருக்குன்னு பார்த்தா, அப்பப்பா!!! அப்படியே தலை சுத்துது. உலக அளவுல தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சி அடைஞ்சது மட்டும் இல்லாம, இப்போ  நம்ம ஊருல உலக சந்தைக்கு வந்த எல்லாமே உடனே கிடைக்குது. விதிவிலக்குனே பார்த்தா, இந்த ஐபோன், ஐபேட் மட்டும்தான். எப்படியும் நம்ம ஊருக்காரங்க வெளி நாட்டுல இருந்து பூட்டப்பட்ட(Locked) கைபேசி/அலைபேசி வாங்கிட்டு வந்துடுவாங்கன்னு தெரிஞ்சோ என்னமோ, இந்த ஆப்பிள் நிறுவனம் ஒரு ஆறு மாசம் கழிச்சுத்தான் நாம ஊருல வெளியிடறாங்க.

1980 களின் கடைசி வரைக்கும் வானொலி தான் பிரதானம். ஏதோ ஊருக்கு ஒன்னு ரெண்டுன்னு சில வீடுகளில கருப்பு வெள்ளை தொலைக்காட்சி இருக்கும். அந்த கருப்பு வெள்ளை தொலைகாட்சியில கூட, திரைக்கு முன்னாடி ஒரு கதவு மாதிரி ஒன்னு இருக்கும். தொலைகாட்சிய அணைச்சதுக்கு அப்புறம், அதை வேற மூடனும். நம்ம கவாஸ்கர் வந்து Solidaire தொலைக்கட்சிக்கு விளம்பரம் செய்வார் பாருங்க... அப்படியே வாய பொளந்துட்டு பார்ப்போம்.

எங்க வீட்டுல ஒரு Murphy வானொலி பெட்டி இருந்தது. வானொலியில "ஆகாசவாணி, செய்திகள் வாசிப்பது, சரோஜ் நாராயண சுவாமி" என்ற கணீர் குரலை யாரவது மறக்க முடியுமா?

பக்கத்து வீட்டுக்கு போயி மணி கணக்குல உக்காந்து தொலைக்காட்சி பார்த்தவங்க, நம்மில்ல 90 % இருப்போம். அதிலே ஒளிபரப்பான மகாபாரதம், அப்புறமா காத்தாடி ராமமூர்த்தியோட நாடகம் எல்லாம் இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கு. வண்ணத்திரை தொலைகாட்சி இருந்துட்டா, ஒரே கொண்டாட்டம் தான்.

நான் 1991 11ம் வகுப்புல சேர்ந்த போதுதான் கணிப்பொறியே பார்த்தேன்.  அப்பகூட, வெறும் DOS ஆபரேடிங் சிஸ்டமும், பேசிக் ப்ரோக்ராம்மிங்கும், கருப்பு வெள்ளை திரைதான். அப்புறமா கல்லூரி வந்ததுக்கு அப்புறமா தான் வண்ணத்திரையுடைய கணிப்பொறி.  

அந்த கால கட்டத்துல எல்லாம் சொந்தத்துல யாரவது பெரியவங்க மண்டைய போட்டுட்டா, ஒருத்தர் பேருந்தில் ஏறி வந்து சொல்லுவாரு. கொஞ்சம் வசதி இருந்தா, அப்படியே மகிழுந்து (Car) எடுத்திட்டு வந்து கையோட கூட்டிட்டு போயிடுவாங்க. தொலைபேசி கூட இல்லாம எத்தனையோ ஊருங்க இருந்து இருக்கு.  அஞ்சலகத்துல மட்டும் தான் தொலைபேசி இருக்கும். அதுவும், ஒரு 10  கிலோ எடையுடன் கூடியதாக இருக்கும். தொலைதூர தகவல் பரிமாற்றம் அப்படின்னா தபால், தந்தி தான்.

அப்புறமா, 1996, 97 வருஷத்துல பேஜர் அப்படின்னு சொல்லகூடிய ஒரு கருவி வந்தது. அப்போ கைபேசி மிக சில பேருகிட்ட மட்டும்தான் இருக்கும். உள்வரும் அலைப்புகளுக்கே (incoming  calls ) ஒரு நிமிடத்துக்கு கிட்ட தட்ட 18  ரூபாய்னு நினைக்கிறேன். சில வருடங்களில, உள்வரும் அழைப்புக்கான பணம் குறைஞ்சு நிமிடத்துக்கு  2  ரூபாய் அளவுக்கு வந்தது. 2003க்கு மேல, அது இலவசம் ஆயிடுச்சு.

ரிலையன்ஸ் எல்லாருக்கும் குறைஞ்ச விலையில கைபேசி கொடுத்து இந்தியாவில ஒரு பெரிய புரட்சி பண்ணினாங்க. அந்த ரிலையன்ஸ் அலைபேசிய வாங்கின பலர் மாசகணக்கா அதுக்கு பணம் கட்டலைங்கறது வேற விஷயம். அதுக்கப்புறம் தான் ஒவ்வொருத்தர் கையிலேயும் ரெண்டு, மூடு, வீட்டுக்கு ஆறு, ஏழுன்னு கைபேசி வலம் வர ஆரம்பிச்சுது.

இதுக்கிடையில, உலகமயமாதம் மற்றும் கணிப்பொறி படிப்பு இப்படிப்பட்ட பல விஷயங்களால, நம்ம ஆளுங்க நிறைய பேர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போக முடிஞ்சது. அங்கே இருக்குற புதுசு புதுசான பல உபகரனங்கள நம்ம நாட்டுல பார்க்க முடிஞ்சுது. வெளிநாட்டு நிறுவனங்களும் நான், நீனு போட்டி போட்டுட்டு வந்து நம்ம ஊருல கடை போடா ஆரம்பிச்சாங்க. சீப்பு சோப்புல இருந்து, ஆகாய விமானம் வரைக்கும் எல்லாமே வெளிநாட்டு சரக்கு ஆயிடுச்சு.

அப்புறமா இந்த இணையம், மின்னஞ்சல் இந்த இரண்டுமே ஒரு புது வகையான தாக்கத்த உண்டு பண்ணுச்சு. அதுகூட இணையம் வாயிலான அரட்டை (Chat) சில வருஷங்களுக்கு முன்னாடி ரொம்ப பிரபலம். நம்ம ஆளு தினமும் குளிக்கிறானோ இல்லியோ, ஒரு உலாவல் மையம் (Browsing  Center) போயி மணிக்கணக்குல இந்த அரட்டையில ஒரு பெண் பெயருல லிட்டர் கணக்குல ஜொள்ளு ஊத்திட்டு இருப்பான். காதலர் தினம் படத்துல நம்ம கவுண்டரு இந்த அரட்டையில கலக்கி இருப்பாரு.

அப்புறமா கொஞ்ச நாளுக்கு அப்புறம், கூகுள், முகநூல், வலைப்பதிவு அப்படின்னு நாம எங்கேயோ போயிட்டோம். இப்போ தினமும் ஒரு முறையாவது கூகுள் பக்கத்த திறக்காத ஆள் யாரவது இருந்தா, அவங்களுக்கு கோயிலே கட்டலாம்.

இதெல்லாம் பாக்குறப்போ, நம்ம தலைமுறை (அதாவது இப்போ ஒரு 30  வயசுல இருந்து 45  வயசு இருக்கறவங்க) இந்த மாற்றத்த கண்கூட பார்த்து இருப்போம். எவ்வளவு மாற்றங்கள்... எத்தனை அறிய கண்டுபிடிப்புக்கள்!!! மனிதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும் அப்படிங்கறது எவ்வளவு சரியா இருக்கு!!!

அடுத்த தலைமுறை, இதைவிட இன்னும் நிறைய கண்டு பிடிப்பாங்க, அதிலே எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆனால், இவ்வளவு நல்ல விஷயங்கள் கண்டுபிடித்த அதே காலகட்டத்துல, எவ்வளவோ தீய விஷயங்களும் கண்டு பிடிச்சுட்டே இருக்கோம். ஆந்தராக்ஸ், அணு குண்டு இன்னும் எவ்வளவோ.

அதுமட்டும் இல்லாம, இயற்க்கை வளங்களை எல்லாம் அழிச்சுட்டு வந்து இருக்கோம். ஒரு பக்கம் பார்த்தா மழை இல்லை, இன்னொரு பக்கம் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்.  இதுக்கு இடையில, உலக வெப்பமயமாதல், கடல் மட்டம் உயருதல் அப்படின்னு பல வகையான ஆபத்துக்கள்.

மூன்றாம் உலகப்போர் வருவது தண்ணீர் மற்றும் உணவுக்காகத்தான் இருக்க முடியும். ஆனால், அதுக்கும் கூடிய விரைவில் ஒரு மருந்து கண்டுபிடிச்சுடுவாங்க. ஒரு நாளைக்கு 2 மாத்திரை சாப்பிட்டா, பல நாள் உணவு தண்ணீர் இல்லாம இருக்கலாம்னு.

ஏதோ... நாம இருக்குற காலம் வரைக்கும், மூணு வேலை மூக்கு பிடிக்க சாப்பிட முடியும்னு நினைக்கிறேன். அதுக்கும் பங்கம் வந்துடாம இருந்தா சரிதான்.